டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டியில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்: 65 பேர் கைது

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் சேலத்தில் அண்மையில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க இன்று தமிழகத்தில் பந்த் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய

News image
Updated On :22 ஜூலை 2013, 12:25 pm

பா.ஜான்பிரான்சிஸ்

பா.ஜ.க தமிழக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி மற்றும் பெரியபாளையத்தில் பா.ஜ.க-வினர் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் சேலத்தில் அண்மையில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க இன்று தமிழகத்தில் பந்த் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் ஏ.கே.மூர்த்தி தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் தேவதாஸ் முன்னிலையிலும் பா.ஜ.க-வினர் பெரியபாளையம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களை பெரியபாளையம் போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.அதே போல கும்மிடிப்பூண்டி பஜாரில் ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 18 பேரை கும்மிடிப்பூண்டி போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.