கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததை கண்டித்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மக்கள் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோயில் இலங்கை அகதிகள் முகாமில் 1990 ஆண்டு முதல் 75 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனம் உதவியுடன் புதிய குடியிருப்பு கடந்த திமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் கழிவுநீர் வெளியேறாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் வடிகால் வசதி செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 40 பெண்கள் உள்ளிட்ட மக்கள் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டாட்சியர் வெங்கடாசலம், பேரூராட்சி செயலர் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 தினங்களுக்கு கழிவுநீர் வடிகால் வசதி செய்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று முகாமிற்கு திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!

”சிலிண்டர் தட்டுப்பாடு: பொய்! ஹோட்டல் - சிலிண்டர் சம்பந்தமே இல்லை!” நயினார் நாகேந்திரன் பேட்டி
உணவு விநியோக நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவு!
நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு
வீடியோக்கள்

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

