இதுகுறித்து ஊழல் எதி்ர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வழக்குறைஞர் அ.குணசேகரன் ஆகியோருக்கு முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்: தமிழகத்தில் பழமையான கோயிலில் ஒன்றாக சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் திகழ்கிறது. இக்கோயில் சமீபத்தில் தமிழகஅரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்கோயிலின் நான்கு புறமும் உள்ள கோபுரங்களில் நமது பண்பாட்டிற்குரிய பழமையான சிற்பங்கள் உள்ளன. தற்போது இக்கோயிலைச் சுற்றி மதில்சுவரை ஒட்டி அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகளும் கட்டப்பட்டு, அதற்கு தேவையான நீருக்கு பல ஆயிரம் அடியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.