டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டிக்கெட் கொடுப்பதில் தாமதம்: ரயில்வே நிலைய அதிகாரி மீது தாக்குதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரயில்நிலைய அதிகாரி திருஞானசம்பந்தன்(23) தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

News image
Updated On :24 ஜூலை 2013, 9:53 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரயில்நிலைய அதிகாரி திருஞானசம்பந்தன்(23) தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சூளூர்பேட்டை முதல் சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் செல்ல டிக்கெட் கேட்டு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்திருக்கிறார். அப்போது எதிர்புறமாக சூளுர்பேட்டை நோக்கி மின்ரயில் செல்ல வந்ததால் அந்த நபரை காத்திருக்கும்படியும் மின்ரயில் சென்றதும் டிக்கெட் தருகிறேன் என நிலைய அலுவலர் திருஞானசம்பந்தம் தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு டிக்கெட் வாங்க வந்த நபர் டிக்கெட் நபர் ரயில்வே நிலைய அதிகாரியிடம் வாய் தகராறில் ஈடுபட்டதும் சிறிது நேரம் கழித்து நிலைய அலுவலர் அந்த நபருக்கு டிக்கெட் தந்திருக்கிறார். அப்போது அந்த நபர் இங்கே தானே இருப்பாய், மாலை வேலை முடிந்து வந்ததும் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டி இருக்கிறார்.

தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அந்த நபர் ரயில் நிலைய அலுவலரின் அறைக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்து அங்கிருந்து தப்பிக்க முயல்கையில் ரயில் நிலைய அலுவலரும், இன்னொரு பெண் ஊழியரும் அந்த நபரை தடுத்து அவரிடம் இருந்து ரூபாய் 4 ஆயிரத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்ததும் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் ஆரம்பாக்கம் ரயில் நிலைய அதிகாரி திருஞானசம்பந்தனிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.