அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் 7,8,9 தேதிகளில் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தமிழகத்தில் 7 மையங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 22,500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். பின்னர் மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கைக்கான கவுன்சிலிங் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் எம்பிபிஎஸ், பிஎஸ்சி விவசாய படிப்புகள் அனுமதி சேர்க்கை முடிவுற்றது. மீதமுள்ள பிஇ, பிடிஎஸ், பி-பார்ம், பிபிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.