திமுகவினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அழைப்பு

விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் வருகிற 31-ம் தேதி பங்கேற்க வேண்டும் என திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் கே.
Updated on
1 min read

விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் வருகிற 31-ம் தேதி பங்கேற்க வேண்டும் என திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் கே.கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திமுக கழகத்தின் மாநில நெசவாளர் அணித்தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையாரும் மாவட்ட கழகத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான வே.தங்கப்பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சி மல்லாங்கிணற்றில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் 31-ம் காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com