பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி காரைக்காலில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி : ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இவர்களை மீட்க இலங்கை தூதரக அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் சல்மான்குர்ஷித் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மத்திய அரசின் முயற்சிக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தரும் என நம்புகிறோம். தமிழக, புதுவை மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க, இந்திய கடற்படைக் கப்பல்கள் பல, இந்திய எல்லையில் தீவிரமான ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொடரும் இந்த பிரச்னைக்கு இருநாட்டு மீனவர்களும் பேசி சமூக தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.