கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே சாலையன்கண்டிகை ஏரியில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் உட்பட போலீஸார் அங்கு சென்ற போது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இரு டிராக்டர்களில் மணல் அள்ளப்படுவதை கண்டு அங்கு சென்றார்.போலீஸார் வருவதை கண்டதும் ஒரு டிராக்டரில் இருந்து டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து போலீஸார் அங்கிருந்தவர்களை கைது செய்து விசாரித்ததில் எளாவூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் நடேசன்(34), டிராக்டர் உரிமையாளர் முருகன்(35) மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தின் டிரைவர் ஆந்திர மாநிலம் காரூர் பகுதியை சேர்ந்த தினகரன்(28) என்பதும் தெரியவந்தது.