இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பொறியியல், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 28-ல் தொடக்கம்: பல்கலை. நிர்வாகி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: அண்ணாமலைப் பல்கலையில் நல்ல முறையில் தகுதி அடிப்படையிலும், அரசு இடஒதுக்கீடு

News image
Updated On :25 ஜூன் 2013, 1:28 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பொறியியல், வேளாண் படிப்புகளின் அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: அண்ணாமலைப் பல்கலையில் நல்ல முறையில் தகுதி அடிப்படையிலும், அரசு இடஒதுக்கீடு விதிமுறைப்படி அனுமதி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் நோக்கமாகும். அதனடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ஜூன் 7,8,9 தேதிகளில் நடத்தியது. மருத்துவப்படிப்புகளுக்கு 12,202 பேரும், பிஇ படிப்புகளுக்கு 3410 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 6766 பேரும் தேர்வெழுதினர். அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை 22.6.2013 அன்று பல்கலைக்கழக இணையதள முகவரி www.annamalaiuniversity.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 150 இடங்களுக்கு நுழைவுத்தேர்வு தரவரிசை பட்டியல் படி 669 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்க மாணவ, மாணவியர்களுக்கு தனி, தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். பிஇ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரையும், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. பிஇ படிப்பிற்கு 2800 பேரும், பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு 1500 பேரும் சேர்க்கப்படுவார்கள். 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் முதுகலை பட்ட படிப்புகள் உள்ளிட்ட இதர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 5-ம் தேதி இறுதிநாளாகும். அதற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள்  04144-238282, 238348, 238349 என்ற தொலைபேசி எண்களிலும், au_regr@ymail.com என்ற இ.மெயில் முகவரியிலும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார். பேட்டியின் போது பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.