சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் தேர்தல் அறிவிப்பில் தெரிவித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுபோன்று பதவி உயர் பெற்றதும் பென்ஷன் இழந்து நிற்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியஅரசு மானியத்தொகையை ரொக்கமாக வழங்குவதை நடைமுறை படுத்தக்கூடாது. அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைகேடுகளை தவிர்க்க பொதுவிநியோக திட்டத்தின் அனைத்து பணிகளையும் நூறு சதவீத கணினி மயமாக்க வேண்டும். தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவிநியோகத் திட்டத்தை மேலும் வலுமைபடுத்தி, விரிவுபடுத்த வேண்டும். அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களின்றி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் ரேஷன் கடை மூலம் வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும். 11 சிமெண்ட் கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்து 2 ஆண்டுகளில் செய்யக்கூடிய உற்பத்தியை குறைத்து, தேவையை அதிகரித்து, விலையை இரண்டு மடங்காக உயர்த்தி விற்பனை செய்வதால் மக்கள் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். மத்தியஅரசு போட்டியினை உறுதி செய்யும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடுகளில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.165 விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒரு மூட்டை ரூ.330ககு விற்கப்படுகிறது. எனவே ரூ.7200 கோடி நிதியை தண்டம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களை ரேஷன்கடை மூலம் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.