டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய கட்சியைத் தேடுகின்றனர்: வைகோ

மக்களின் நல் ஆதரவோடு மதிமுக 20-ம் ஆண்டை எட்டிப் பிடித்துள்ளது.சென்ற சட்டப்பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்தது.எனினும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக உள்ளோம்.ஈழத்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:38 am

அரவிந்தன்

திமுக, அதிமுகவுக்கு மாற்றான புதிய சக்தியை மக்கள் தேடத் துவங்கியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுகவின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.இதனையொட்டி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மதிமுக கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-

மக்களின் நல் ஆதரவோடு மதிமுக 20-ம் ஆண்டை எட்டிப் பிடித்துள்ளது.சென்ற சட்டப்பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்தது.எனினும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக உள்ளோம்.ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, ஸ்டெர்லைட் ஆலை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்ற போராட்டக் களங்களில் மதிமுக ஆக்கப்பூர்வமாகப் போராடியுள்ளது.பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி பல கட்டங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

மதுக் கடைகள் அகற்ற வலியுறுத்தி 3 கட்டங்களாகப் பேராட்டம் நடத்தியுள்ளோம்.இந்தப் போராட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக புதிய சக்தியைத் தேடும் படலம் மக்கள் மத்தியில் தொடங்கி இருக்கிறது. எனவே மக்கள் எதிர்பார்பை ஈடு செய்யும் வகையில் மதிமுக தொடர்ந்து மக்கள் பிரச்னைக்காகப் போராடும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.