குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவும், அவரது இயக்கத்தைச் சார்ந்ததலைவர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, சாதி மோதல்களை உருவாக்குவது, வன்முறையை தூண்டுவது, அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறானது

News image
Updated On :12 மே 2013, 6:24 pm IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவும், அவரது இயக்கத்தைச் சார்ந்ததலைவர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, சாதி மோதல்களை உருவாக்குவது, வன்முறையை தூண்டுவது, அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறானது மட்டுமின்றி தமிழகத்தில் கலவரம் ஏற்படக் கூடிய, மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது.இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் தமிழக மக்கள் இரையாகி விடக் கூடாதுஎன்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தின் பொது அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட மாநில அரசு சட்டவரம்புக்குட்பட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.அதேநேரத்தில் நீதிமன்ற விசாரணையின்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி யார் ஒருவரையும் கைது செய்து சிறையிலடைப்பது ஜனநாயக அணுகுமுறையாகாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைபாடாகும்.தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசினுடைய நடவடிக்கை சரியான அணுகுமுறையல்ல என்பதை சுட்டிக்காட்டுவதோடு, இந்நடவடிக்கையை கைவிட வேண்டுமென தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.