நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி: கிடைப்பதில் சிரமம் இருந்தால் புகார் கூறலாம்

தமிழக அரசின் 2013- 14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரிசி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை, திருத்தணி ஸ்ரீசுப்பிரமணியசாமி

Updated On :12 மே 2013, 6:12 pm IST

தமிழக முதல்வரின் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி பெறுவதில் சிரமம் இருந்தால் 27662622 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம் என மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழக அரசின் 2013- 14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரிசி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை, திருத்தணி ஸ்ரீசுப்பிரமணியசாமி கூட்டுறவு பண்டக சாலை, பொதட்டூர்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை மற்றும் பூந்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய இடங்களில் ஒரு கிலோ தரமான அரிசி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் அரிசி கிடைப்பதில் சிரமம் ஏதும் ஏற்பட்டால் 27662622 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.