சிதம்பரம் அண்ணாமலைநகர் வடக்கிருப்பைப் சேர்ந்த விஜயக்குமார் (35). அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல ஆட்டோ மெக்கானிக் ஒர்க்க்ஷாப்பில் பி பிரிவு பொறியாளராக உள்ளார். இவர் மீது குமராட்சி மற்றும் அண்ணாமலைநகர் பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த இரு வழக்குகள் உள்ளது. தொடர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட விஜயக்குமாரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா கோப்புகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், ஜெயக்குமாரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் திங்கள்கிழமை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.