இந்நிலையில் வேளச்சேரியில் வெளியூர் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.1985-ம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.அப்போது எம்.ஜி.ஆர்.,வண்டலூரில் சாலை விரிவாக்கத்துக்காகவும், உயிரியல் பூங்கா அமைக்கவும் பல ஏக்கர் நிலங்களை அரசு கையப்படுத்தியுள்ளது. இனி ஒரு நிலம்கூட வண்டலூரில் எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.எனவே வண்டலூரில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி அங்கு புறநகர் பஸ் நிலையம் வரப் போகிறதா என்றும், வேளச்சேரி, மாதவரம் புறநகர் பஸ்நிலையங்கள் கதி என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.