அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு: தமிழகத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகியவற்றிற்கான நுழைவுத் தேர்வு தமிழகத்தில் அண்ணாமலைநகர், சென்னை

News image
Updated On :15 மே 2013, 1:08 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகியவற்றிற்கான நுழைவுத் தேர்வு தமிழகத்தில் அண்ணாமலைநகர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய 7 மையங்களில் வருகிற ஜூன் 7,8,9 தேதிகளில் நடைபெறுகிறது என பதிவாளர் ந.பஞ்சநதம் அறிவித்துள்ளார்.

பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை பேப்பர்-1 பயாலஜி தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை  பேப்பர்-2 பிசிகல் சயன்ஸ் தேர்வும், ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை பேப்பர்-3 கணிதம் தேர்வும் நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பி.ஃபார்ம் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பேப்பர்-1 பயாலஜி தேர்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பேப்பர்-2 பிசிகல் சயன்ஸஸ் தேர்வும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.