போராடத்தின் வெற்றிக்காகவும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பாராட்டு தெரிவித்தும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரைவில் பாராட்டுவிழா நடத்த இருக்கிறோம். விழாவிற்கு தமிழக முதல்வர், பல்கலைக்கழக இணைவேந்தராக பொறுப்பேற்கவுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைக்கவுள்ளோம். அதோடு மட்டுமல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பல்வேறு தொழிற்சங்கத்தினரை அழைத்து பாராட்டுவிழாவை நடத்தவுள்ளோம். இந்த நிகழ்வு 83 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சுதந்திர விடியல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்திருப்பது விளைவாக மிகப்பெரிய நினைவுத்தூனை நாங்கள் அமைக்கவுள்ளோம். இந்த விடியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கிடைத்துள்ள விடியல், சிதம்பரத்திற்கே கிடைத்துள்ள, கடலூர் மாவட்டத்திற்கே கிடைத்துள்ள விடியலாகும். இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும் என அவர் தெரிவித்தார்.