சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் முதல் முறையாக 1986-88ல் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளிவிழா சந்திப்பு சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக விலங்கியல்துறையில் உள்ள ஹெடெக் ஹாலில் நடைபெற்ற விழாவிற்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆர்.ஞானதேவன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், விலங்கியல் துறைத் தலைவர் செல்வி சபாநாயகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் வி.சுப்பையா, என்.ராமலிங்கம், கே.வீரராகவன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் எஸ்.மணி நன்றி கூறினார்.
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் 86-88ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் சுமார் 130 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் தாங்கள் பயின்ற காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். தற்போது தாங்கள் பணியாற்றும் இடம் மற்றும் வாழ்க்கை முறையை பற்றி பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மதியம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு சென்று படகு சவாரி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!

மேட்டூர் அணை நிலவரம்!

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
டிரம்ப்புடன் அம்பானியின் ரிலையன்ஸ்: அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

