இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நிதிநெருக்கடி, நிதிமுறைகேடு ஆகியவற்றால் சிக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்புற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு கவுன்சிலிங் மூலமே மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுகிறது. தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு 2013-14 கல்வி ஆண்டில் நுழைவுத்தேர்வு மூலமே மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அறிவித்துள்ளார்.