அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு!

சிதம்பரம் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த பிறகும் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் அரசு பஸ் நேற்று(சனிக்கிழமை)

News image
Updated On :19 மே 2013, 8:51 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் நேற்று(சனிக்கிழமை) இரவு சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணாடி மர்மநபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது.

சிதம்பரம் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த பிறகும் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் அரசு பஸ் நேற்று(சனிக்கிழமை) இரவு புறப்பட்டது. சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் பிரம்மராயர்சுவாமி கோயில் அருகே எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்மநபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கிவிட்டு தலைமறைவாயினர். இதில் பஸ்ஸின் முன்புறக்கண்ணாடி உடைபட்டது. இதுகுறித்து ராசிபுரம் தாலுக்காவைச் சேர்ந்த பஸ் டிரைவர் ரத்தினம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.