/

ரூ.15 ஆயிரம் லஞ்சம்: பள்ளிப்பட்டு தாசில்தார் கைது

திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த கதம் நகரைச் சேர்ந்தவர் ராம்ஜி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாராம். இவருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை மதிப்பீடு செய்ய

News image
Updated On :22 மே 2013, 12:39 pm

ஜி. யோகானந்தம்

திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த கதம் நகரைச் சேர்ந்தவர் ராம்ஜி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாராம். இவருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை மதிப்பீடு செய்ய பள்ளிப்பட்டு தாசில்தாரை அணுகியுள்ளார். அப்போது, தாசில்தார் திலகம் நிலத்தை மதிப்பீடு செய்ய ரூ. 15 ஆயிரம் தர வேண்டும் என்றாராம். இதுகுறித்து ராம்ஜி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சிவசங்கரனிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப் படி, ரூ. 15 ஆயிரத்தை தாசில்தார் திலகத்திடம் ராம்ஜி அளித்தபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். பின்னர் மதியம் வரை அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தனர்.

ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்னர் சென்னை அம்பத்தூர் தாசில்தார் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.