டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாகன சோதனையில் 3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 3 லட்சத்து 75ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :28 மே 2013, 9:10 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 3 லட்சத்து 75ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனை சாவடியில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கான உள் போக்குவரத்து சோதனைச் சாவடி மற்றும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கான வெளி போக்குவரத்து சோதனை சாவடியில் ஒரே நேரத்தில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் பன்னீர்செல்வம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தரணி, தாமோதரன், இளங்கோவன், முனிராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெய் மனோகர், இளமுருகன் உட்பட 40 பேர் கொண்ட போக்குவரத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.