எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக மழை

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனாலும் இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. மாணவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் வழக்கம்போல் அவரவர் பணிகளை மேற்கொண்டனர்.

News image
Updated On :5 நவம்பர் 2013, 10:46 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனாலும் இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. மாணவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் வழக்கம்போல் அவரவர் பணிகளை மேற்கொண்டனர்.

இலங்கை அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. மழை தொடர்ந்த நிலையில் இல்லாமல் விட்டுவிட்டு பெய்துவருவதால், சாலை உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் எளிதில் வடிந்துவிடுகிறது.

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தீபாவளி விடுமுறையில் இருந்துவிட்டு திங்கள்கிழமை முதல் கடலுக்குள் செல்லத் தொடங்கினர். இலங்கை பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், குறைந்த தூரத்தில் மீன்பிடித்துவிட்டு திரும்பும் வகையிலேயே திட்டமிட்டு கடலுக்குள் சென்றுள்ளனர்.

திருநள்ளாறு, பேட்டை, விழுதியூர், தென்னங்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் காலம் கடந்த நிலையில், நடவுப் பணிகள் நடக்கிறது. இப்போது பெய்துவரும் மழையால் இப்பணியில் பாதிப்பு ஏற்படாது என விவசாயிள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.