வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை அருகே விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்

திருநெல்வேலி அருகே மணிமூர்த்தீ்ஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

News image
Updated On :9 நவம்பர் 2013, 7:00 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே மணிமூர்த்தீ்ஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகிறது. டெங்கு போன்ற நோய்கள் தாக்குவதை தவிர்க்க நீரை காய்ச்சி பயன்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன.

இதற்கிடையே திருநெல்வேலி அருகே தச்சநல்லூர் மண்டலம், 4 வது வார்டு மணிமூர்த்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது

விருந்து சாப்பிட்டவர்களில் 50 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரே சமயத்தில் 50 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.