வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை: அடவிநயினார், கருப்பாநதி அணைகள் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அடவிநயினார், கருப்பாநதி அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில்

News image
Updated On :12 நவம்பர் 2013, 12:48 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அடவிநயினார், கருப்பாநதி அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ தொடங்கி பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை பெய்யவில்லை. இதனிடையே வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 45 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 33 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் தலா 40 மி.மீ மழையும், குண்டாறில் 8.2 மி.மீ மழையும், சிவகிரியில் 19 மி.மீ மழையும், தென்காசியில் 1 மி.மீ மழையும், வீரகேரளம்புதூரில் 3 மி.மீ மழையும், செங்கோட்டையில் 13 மி,மீ மழையும் பதிவாகியுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 147 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 93.50 அடியாக இருந்தது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2.90 அடி நீர்மட்டம் உயர்ந்து 43.97 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 101 கனஅடி நீர்வரத்து இருந்தது.

அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101.54 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 54.75 அடியாகவும், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் 9.00 அடியாகவும் இருந்தது.

இம்மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.