மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சிதம்பரத்தில் திரளானோர் சபரிமலை பயணத்திற்கு மாலை அணிந்தனர்!

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலிலும், அண்ணாமலைநகரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலிலும் திரளான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிந்து

News image
Updated On :17 நவம்பர் 2013, 12:26 pm

G.Sundararaj

கார்த்திகை 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தில் திரளான ஐயப்ப பக்தர்கள் சபரமலை பயணத்திற்கு மாலை அணிந்து கொண்டனர்.

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலிலும், அண்ணாமலைநகரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலிலும் திரளான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்கும் நாள் என்பதால் சிதம்பரம் நகரில் மேலரதவீதி, தெற்குரதவீதியில் ஐயப்ப வேட்டி, துண்டு, துளசி மாலை, மணி மாலை, சந்தனப்பவுடர் மற்றும் பூஜை சாமான்கள் வாங்க திரளான பக்தர்கள் குவிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.