குடும்ப அட்டையுடன் ஆட்சியர் அலுலகத்தை கிராம மக்கள் முற்றுகை
மானூர் ஒன்றியம், பல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் இயங்கும் பகுதி நேர


திருநெல்வேலியில் மண்ணெண்ணை உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
மானூர் ஒன்றியம், பல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பள்ளமடை கிராமத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் இயங்கும் பகுதி நேர ரேசன்கடை உள்ளது. இந்த கடையில் 474 குடும்ப அட்டைகளுக்கு நவம்பர் மாதம் விநியோகம் செய்ய 6900 கிலோ புழுங்கல் அரிசி, 750 கிலோ சர்க்கரை, 250 கிலோ கோதுமை, 771 லிட்டர் மண்ணெண்ணை, பாமாயில் 420 பாக்கெட், உளுந்தம்பருப்பு 100 கிலோ, துவரம் பருப்பு 250 கிலோ உள்ளிட்ட பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணை போன்றவை குடும்ப அட்டைகளுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் சுழற்சி முறையில் பயனாளிகளுக்கு மேற்கண்ட பொருட்கள் வழங்கப்படுகிறதாம். எனினும் மண்ணெண்ணை 2 மாதத்திற்கு ஒரு முறை கூட கிடைப்பதில்லையாம். துவரம் பருப்பு, பாமாயில் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை ரேசன் கடைக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்தும் அப்பகுதி மக்களுக்கு மண்ணெண்ணை வழங்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பள்ளமடை கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களுக்கு அனைத்து பொருட்களும் முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...