இதற்கிடையே நகர்மன்ற பணியாளர்கள், தலைவி, துணைத் தலைவர் உள்ளிட்ட மன்றத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்தது. இதில் நகர்மன்ற பணியாளர் ஒருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்ற பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். தலைவி, துணைத் தலைவர், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள். இதனிடையே அண்மையில் விக்கிரமசிங்கபுரத்தில் எம்.எல்.ஏ, பங்கேற்ற நகர்மன்ற விழாவில் தலைவி மனோன்மணி பங்கேற்காமல் புறக்கணித்தார். துணைத் தலைவர், உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அதன் பிறகு தலைவி ஒரு அணியாகவும், துணைத் தலைவர், அதிமுக உறுப்பினர்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனராம். இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை.