தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் குருபூஜை விழா!

சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் 134-வது ஆண்டு குருபூஜை விழா திங்கள்கிழமை வெகு சிறப்பாக

News image
Updated On :25 நவம்பர் 2013, 10:25 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் 134-வது ஆண்டு குருபூஜை விழா திங்கள்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிவத்தொண்டர்களாகிய அறுபத்துமூவரின் திருவரலாற்றை சேக்கிழார் பெருமான் செய்யுள் வடிவில் திருத்தொண்டர் புராணமெனும் பெரியபுராணம் மூலம் உலகறியச் செய்துள்ளார். அப்புராணத்தை அனைவரும் படித்து உணரும் வகையில் 1952-ல் உரை நடை வடிவில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து சிதம்பரத்திற்கு வந்த ஆறுமுகநாவலர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.  தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்காளாக கொண்டு அரும்பணியாற்றியவர் ஆறுமுகநாலலர் பெருமான். இவர் சேக்கிழார் பெருமானிடம் பெரிதும் பக்தி கொண்டு திகழ்ந்தவர். நாவலர், சிதம்பரத்தில் சேக்கிழார் பெருமானுக்கு கோயில் எழுப்பி சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்

அச்சிறப்பு வாய்ந்த ஆறுமுக நாவலருக்கு சிதம்பரம் ஞானப்பிரகாசர் வடக்குத்தெருவில் உள்ள சேக்கிழார் கோயிலில் குருபூஜை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.பின்னர் ஆறுமுக நாவலருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மேலவீதி ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில் திருவுருவ வழிபாடு நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறக்கட்டளை அறங்காவலரும், பள்ளிக்குழுத் தலைவருமான டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கே.சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.