இதனால் திங்கள்கிழமை மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், தாங்கள் பள்ளிக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும், தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கு செல்லாமல் தங்களது கிராமத்தின் முகப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன் (புவனகிரி), அகிலன் (மருதூர்) மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இரு தினங்களில் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு மதியம் பள்ளிக்கு சென்றனர்.