தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் தாமதம்!

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலம்பிமங்கலத்திற்கும் இடையே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தில் உள்ள போல்ட்டில் உள்ள வெல்டிங் இணைப்பு

News image
Updated On :26 நவம்பர் 2013, 10:42 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம்-சிலம்பிமங்கலம் இடையே செவாவாய்க்கிழமை காலை ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கமாக சென்ற ரயில்கள் தாமதமாக சென்றன.

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலம்பிமங்கலத்திற்கும் இடையே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தில் உள்ள போல்ட்டில் உள்ள வெல்டிங் இணைப்பு துண்டிக்கப்பட்டு விரிசல் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை ரயில்பாதையில் ரோந்து சென்ற கேங்க்மேன் அருணாசலம் தண்டவாளத்தில் விரிசலை காலை 6.30 மணிக்கு பார்த்து புதுச்சத்திரம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக விழுப்புரம் மார்க்கமாக வந்த ரயில்கள் புதுச்சத்திரம் ரயில் நிலையத்திலும், மயிலாடுதுறை மார்க்கமாக வந்த ரயில்கள் சிதம்பரம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் சிதம்பரம் உதவிப்பொறியாளர் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் பணியில் ஈடுபட்டு விரிசலை சரி செய்தனர். பின்னர் அவ்வழியே  10 கி.மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு ரயில்கள் புறப்பட்டு சென்றது.

அப்போது விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கமாக வந்த ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன. மயிலாடுதுறை - விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயில் 7.05 மணிக்கு வந்து 8.11 மணிக்கு புறப்பட்டு சென்றது. திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் பயில் 7.30 மணிக்கு வந்து 7.44 மனிக்கு புறப்பட்டு சென்றது. விழுப்புரம்- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் 8.09 மணிக்கு வந்து 8.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. நாகூர்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 7.58 மணிக்கு வந்து 8.27க்கு புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.