இதுகுறித்து என்.கலியமூர்த்தி மேலும் தெரிவித்தது: நீதிமன்றத்தில் எவ்வித தடையாணை எதுவும் பெறவில்லை. மேற்கடி இடத்தை மீனவர் சமுதாயத்திற்கு எழுதிக்கொடுத்த எஸ்.ரத்தினவேல்நாடாருக்கும், தற்போது ஆட்சேபனை தெரிவித்துள்ள முத்துக்கிருஷ்ண நாடாருக்கும் நிலஉரிமை தொடர்பாக வழக்கு நடைபெற்று 1999-ல் நீதிமன்றத்தில் முடிவு ஏற்பட்டது. பின்னர் மீனவர் சங்கம் சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. நகராட்சி போடப்பட்ட சாலை பழுதானதால், மீண்டும் அதன் மீது தார் சாலை அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் மீனவர் காலனியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.