வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை அருகே 40 ஆட்டுக்குட்டிகள் திடீர் சாவு: கோமாரி நோயா? விவசாயிகள் கலக்கம்

திருநெல்வேலி அருகே கிடையில் அடைத்து வைத்திருந்த 40 செம்மறி ஆட்டுக் குட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தன. கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :26 நவம்பர் 2013, 6:07 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே கிடையில் அடைத்து வைத்திருந்த 40 செம்மறி ஆட்டுக் குட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தன. கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, கடையம், மேலப்பாளையம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதியில் இயங்கி வந்த ஆடு, மாடுகள் விற்பனைச் சந்தைகள் மூடப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் தாக்கி வருகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருநெல்வேலி அருகே சீவலப்பேரி அரியகுளத்தில் ஆட்டுக் கிடையில் அடைத்து வைத்திருந்த 40 செம்மறி ஆட்டுக்குட்டிகள் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தன.

அரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மேலகுளத்தில் ஆட்டுக் கிடை அமைத்து அங்கு சுமார் 2,000 ஆடுகளை அடைத்து வளர்த்து வருகின்றனர். இந்த கிடையில் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் பால் குடித்த பிறகு 40 ஆட்டுக் குட்டிகளை தனியாக ஒரு பட்டியில் அடைத்து வைத்திருந்தனராம்.

செவ்வாய்க்கிழமை பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 40 ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. வழக்கமாக கார்த்திகை மாதத்தில் ஆடுகளுக்கு நீல நாக்கு நோய் தாக்குவதுண்டு. ஆனால் இந்த ஆட்டுக்குட்டிகள் இறக்க என்ன காரணம் என தெரியவில்லை.

கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மேலகுளம் கிராமத்திற்கு சென்று இறந்த ஆட்டுக் குட்டிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒரே சமயத்தில் 40 ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.