நெல்லை அருகே 40 ஆட்டுக்குட்டிகள் திடீர் சாவு: கோமாரி நோயா? விவசாயிகள் கலக்கம்
திருநெல்வேலி அருகே கிடையில் அடைத்து வைத்திருந்த 40 செம்மறி ஆட்டுக் குட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தன. கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.










