எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜை

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜையாக ஓலை சுவடிவைத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :13 அக்டோபர் 2013, 6:25 pm

செல்வ முத்துகுமாரசாமி

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜையாக ஓலை சுவடிவைத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரி நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜை வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னதிக்கு முன்பாக உள்ள சங்கு மண்டபத்தில் மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரருக்கு உகந்த விருட்சம் தர்ப்பை என்பதால், தர்ப்பையைகொண்டு கூர்ச்சம் வடிவமைக்கப்பட்டது. அங்கு ஓலைச்சுவடி வைக்கப்பட்டது.

விக்னேஸ்வரபூஜை, புன்னியாகவாஜனம், கலசபூஜை நடத்தப்பட்டு பிரசாதங்கள் வைத்து மகா  தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி ஏ.ராஜராஜன்வீராசாமி, தருமபுர ஆதீன  கட்டளை விசாரணைப் பிரதிநிதி  கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,  சிவாச்சாரியார்கள்,  கோயில் சிப்பந்திகள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். திங்கள்கிழமை விஜயதசமி நாளில் அம்பு போடும் நிகழ்ச்சி இக்கோயில் சார்பில் நடத்தபடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.