தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து ஏறத்தாழ 20 கடல் மைல் தொலைவில் இந்திய கடல்பகுதியில் சுற்றித் திரிந்த அமெரிக்க நாட்டில் உள்ள அட்வன்போர்டு என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு என்ற பாதுகாப்பு கப்பலை கடலோர காவல் படையினர் கடந்த 12-ம் தேதி சுற்றி வளைத்தனர்.அந்தக் கப்பலில் 35 நவீன ரக துப்பாக்கிகளும், 25 பாதுகாப்பு வீரர்களும், 11 மாலுமிகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே, தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் சிலரிடம் இருந்து கப்பலில் உள்ளவர்கள் 1500 லிட்டர் டீசலை திருட்டுத் தனமாக பெற்றது கண்டறியப்பட்டதால் கப்பலை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.இதையெடுத்து, கடலோர காவல் படை அதிகாரிகள், கடலோரா காவல் பாதுகாப்பு குழும (மரைன்) போலீஸôர், தூத்துக்குடி மாவட்ட போலீஸார் மற்றும் உளவுத் துறை போலீஸார் கப்பலில் உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.