மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருமலையில் உள்ள பாபவிநாசம் பகுதியில் உள்ள கடைகள் மூடல்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் திருமலையை சுற்றி உள்ள நீர்தேக்கங்களையும் காண செல்வர். அதனால் அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வனத்துறை தேவஸ்தானத்திடம்

News image
Updated On :19 அக்டோபர் 2013, 3:27 pm

திருமலையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாபவிநாசம் நீர்தேக்கம் புகுதியில் உள்ள கடைகளை சனிக்கிழமை வனத்துறையினர் மூடினர்.

       திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் திருமலையை சுற்றி உள்ள நீர்தேக்கங்களையும் காண செல்வர். அதனால் அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வனத்துறை தேவஸ்தானத்திடம் சில தேவையான வசதிகளை செய்து கொள்ள அனுமதி அளித்தது. அங்கு தற்போது 78 கடைகள் உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். அதனால் அவர்களின் கழிவு நீர் முழுவதும் நீர்தேக்கத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

     மேலும் அது அடர்ந்த வனப்பகுதி ஆதலால் அங்கு வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதற்கு காரணம் அவற்றை அவர்கள் வேட்டையாடுவது என வனத்துறையினர் கருதுகின்றனர். எனவே அங்கு உள்ள கடைகளை மூட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாசலு தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.