திருமலையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாபவிநாசம் நீர்தேக்கம் புகுதியில் உள்ள கடைகளை சனிக்கிழமை வனத்துறையினர் மூடினர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் திருமலையை சுற்றி உள்ள நீர்தேக்கங்களையும் காண செல்வர். அதனால் அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வனத்துறை தேவஸ்தானத்திடம் சில தேவையான வசதிகளை செய்து கொள்ள அனுமதி அளித்தது. அங்கு தற்போது 78 கடைகள் உள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். அதனால் அவர்களின் கழிவு நீர் முழுவதும் நீர்தேக்கத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
மேலும் அது அடர்ந்த வனப்பகுதி ஆதலால் அங்கு வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதற்கு காரணம் அவற்றை அவர்கள் வேட்டையாடுவது என வனத்துறையினர் கருதுகின்றனர். எனவே அங்கு உள்ள கடைகளை மூட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாசலு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


