டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆந்திராவிற்கு கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் கூட்டுச்சாலையில் ஆந்திராவிற்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி

News image
Updated On :21 அக்டோபர் 2013, 9:44 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் கூட்டுச்சாலையில் ஆந்திராவிற்கு கடத்த பதுக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி கைப்பற்றினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்.அப்போது புதுவாயல் கூட்டுச் சாலை அருகே சாலையோரம் தார்பாய் மூடி ஏதோ வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதனை சோதித்தார். அப்போது அங்கு சிறு சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி கட்டப்பட்டு ஆந்திராவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கேட்பாரற்று கிடந்த அந்த 90 ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் அந்த அரிசி மூட்டைகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மொத்த எடை 4 டன்னாகும். இந்த ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.