அப்போது ரகேஷ்மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளேன். மதுரை திருநெல்வேலி இடையே நடைபெற்று வரும் மின் மயமாக்கும் பணி, வரும் ஏப்ரல், மே மாதத்தில் நிறைவடையும்.திருநெல்வேலி தென்காசி இடையே கூடுதலாக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை புனலூர் அகல ரயில்பாதைத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 300 கோடி தேவை. அப்பகுதி மலைப்பிரதேசம். மேலும் ரயில்வேத்துறை நிதி பற்றாக்குறை இருப்பதால், அத்திட்டத்தை நிறைவேற்ற 5 ஆண்டுகள் வரை ஆகலாம்.