எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்களில் 14 பேர் விடுதலை

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜூலை, 30-ம் தேதியும், 31-ம் தேதியும் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தது. இவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :5 செப்டம்பர் 2013, 10:47 am

செல்வ முத்துகுமாரசாமி

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 29 பேரில் 14 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், வெள்ளிக்கிழமை இவர்கள் மண்டபம் வருவார்கள் எனவும் மீன் வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜூலை, 30-ம் தேதியும், 31-ம் தேதியும் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தது. இவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டும் விடுதலை கிடைக்கவில்லை. புதன்கிழமை தமிழக மீனவர்களுடன் காரைக்கால் மீனவர்கள் 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்த தகவல் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்கால் மீன் வளத்துறை இணை இயக்குநர் என்.இளையபெருமாள் வியாழக்கிழமை கூறும்போது, காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஜூலை 30-ம் தேதியும், 31-ம் தேதியும் இரு பிரிவாக 29 பேர் இலங்கை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடலில் பாயிண்ட்பெட்ரோ என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட, காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த வீரகுமார், மோகன், கதிரவன், குட்டிவீரன், முரளி, கந்தசாமி, செல்வமணி, கலைமணி ஆகியோரும், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன், கனகசபை, கருக்களாச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், ராஜா, செல்வநாதன், மதுரைவீரன் ஆகிóய 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இவர்கள் வெள்ளிக்கிழமை மண்பம் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் தரப்பில் கூறும்போது, 14 பேர் விடுதலை கிடைத்துவிட்டது. இவர்களின் படகுகள் தரப்படவில்லை. இதனால் மீனவர்கள் படகின்றி செல்லமுடியாது என அங்கு கூறியுள்ளனர். இதனால் விடுதலை செய்யப்பட்டவர்கள் குறித்த நாளில் வருவார்களா என்பது உறுதியாக கூறமுடியவில்லை என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.