திருநெல்வேலியில் பாரதியார் நினைவு தினம்
பாரதியார் உலக பொதுச் சேவை மன்றம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைப்பின் தலைவர் அ. மரியசூசை தலைமையில் மன்றத்தினர் மாலை அணிவித்தனர். அமைப்பின்


திருநெல்வேலியில் மகாகவி பாரதியாரின் 92 வது நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பாரதியார் உலக பொதுச் சேவை மன்றம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைப்பின் தலைவர் அ. மரியசூசை தலைமையில் மன்றத்தினர் மாலை அணிவித்தனர். அமைப்பின் செயலர் கவிஞர் கோ. கணபதிசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் தெ.கு. ராமச்சந்திரன், மாநில பெட்காட் துணைத் தலைவர் பி. வெங்கடாசலம், ஒருங்கிணைப்பாளர் நடராஜன், நஞ்சுண்டேஸ்வரன், கதிர்வேல், கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பாரதியாரின் கனவை நனவாக்க பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...