சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மனைவிக்கு கொடுமை: கணவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :12 செப்டம்பர் 2013, 4:01 pm IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி மகன் ராசு (23). இவரது மனைவி எழில்அரசி (20). இந்த தம்பதியருக்கு கடந்த 7.11.2011-ல் திருமணம் நடைபெற்றதாம்.

 இந்த நிலையில், ராசு அவரது மனைவி எழில்அரசியை அடித்துக் கொடுமை செய்தாராம். மேலும் அவர் 17 வயதுடைய யாழினி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டாராம்.

 2-ம் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மனைவி எழில்அரசி கேட்டதற்கு அவரது  குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

 இச் சம்பவம் குறித்து எழில்அரசி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் ராசு (23)- வை அரூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.