பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி மகன் ராசு (23). இவரது மனைவி எழில்அரசி (20). இந்த தம்பதியருக்கு கடந்த 7.11.2011-ல் திருமணம் நடைபெற்றதாம்.
இந்த நிலையில், ராசு அவரது மனைவி எழில்அரசியை அடித்துக் கொடுமை செய்தாராம். மேலும் அவர் 17 வயதுடைய யாழினி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டாராம்.
2-ம் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மனைவி எழில்அரசி கேட்டதற்கு அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.
இச் சம்பவம் குறித்து எழில்அரசி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் ராசு (23)- வை அரூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


