சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை: நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 103.08 அடியாக இருந்தது.

News image
Updated On :13 செப்டம்பர் 2013, 7:48 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த  மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 103.08 அடியாக இருந்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது. மேற்குத்  தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 21 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 8 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 3 மி.மீ  மழையும், மணிமுத்தாறு அணையில் 7.4 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.

மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1584.05 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணைக்கும் நீர்வரத்து  கணிசமாக இருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 103.08 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 60.38 அடியாகவும்  இருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 1150 கனஅடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்த காரணத்தால் மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. இதற்கிடையே பாசனத் தேவைக்காக மணிமுத்தாறு  அணையில் இருந்து 200 கனஅடி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.