டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நெல்லை அருகே கிராம மக்கள் திடீர் மறியல்
புதன்கிழமை கொழுமடை பஸ் நிறுத்தம் அருகே பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த கிராம மக்கல் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அஙஅகு சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.









