மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புவனகிரி பேரூராட்சி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆதிவராகநத்தம் கிராமமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் பட்டா வழங்கியதை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 10:07 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆதிவராகநத்தம் கிராமமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் பட்டா வழங்கியதை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பெருமாத்தூரில் இலுப்பைகுளம் அருகே உள்ள 5 ஏக்கர் 12 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 14 பேருக்கு பட்டா வழங்கியதை கண்டித்தும், பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதிவராகநத்தம் கிராம மக்கள் ஜெகதீசன் தலைமையில் சுமார் 200 பேர் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.