தகவல் அறிந்த குமராட்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, காவலர்கள் மாரிமுத்து, ராமலிங்கம் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று பொக்லீனையும், மணல் டிராக்டரையும் பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்ற டிராக்டரை போலீஸார் துரத்திச் சென்றனர். அப்போது ம.உடையூர் அருகே 6 பேர் கொண்ட கும்பல் போலீஸாரை வழிமறித்து மணல் அள்ளப்பயன்படுத்தும் சம்மட்டியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி உள்ளிட்ட போலீஸார் வாய்க்காலில் குதித்து வயல்வழியாக தப்பியபோது ஊர்மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, காவலர் மாரிமுத்து ஆகியோர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமராட்சி போலீஸார் வழக்குப் பதிந்து மேல்ராதாம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் நேருவை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.