மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய இளைஞர் கைது

சிதம்பரம் அருகே கிள்ளை செல்லும் சாலையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கள்ளக்குறிச்சி

News image
Updated On :20 செப்டம்பர் 2013, 12:02 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே கிள்ளையில் பெண்ணிடம் நூதன முறையில் பணத்தை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே கிள்ளை செல்லும் சாலையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்தலி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (33) என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர் கடந்த மாதம் கிள்ளை பில்லுமேட்டைச் சேர்ந்த செல்வராணி (34) என்ற பெண்ணிடம் ரூபாய் நோட்டை கீழே போட்டு அவரது ரூ.45ஆயிரம் ரொக்கத்துடனான பையை நூதன பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பழனிசாமியிடமிருந்து ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து பழனிசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.