சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சி.மதியழகன் (அண்ணாமலைப் பல்கலை) தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கு.ராஜேந்திரன் (பாரதிதாசன் பல்கலை), பொருளாளர் ஆர்.சிவக்குமார் (பாரதியார் பல்கலை), துணைத் தலைவர்கள் எம்.எக்வின்ரெனி, சி.எம்.எபிநேசர், வெ.செல்வராஜ், எஸ்.பாண்டியன், எஸ்.புத்தன், ஜி.மாணிக்கவாசகம், மாநில செயலாளர்கள் என்.அரசு, ஜி.அன்பழகன், க.ஆறுமுகம், எஸ்.ஜி.குணசேகரன், பி.தாமோதகன், எம்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 80 பேர் பங்கேற்றனர்.