எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புரட்டாசி 2-வது சனிக்கிழமை : ஆநிரை தலைவனாக காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்)  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 9:44 am

செல்வ முத்துகுமாரசாமி

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்)  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற பெயர் கொண்டுள்ளார்.

இக்கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் உற்சவருக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. நிகழாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை (21.9.2011) உற்சவரான ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆலிலைக் கண்ணனாக காட்சியளித்தார்.

இரண்டாவது சனிக்கிழமையான 28-ம் தேதி பசுக் கூட்டங்களின் தலைவனாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று உற்சவரையும், மூலவரையும் வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவும் செய்திருந்தது.

காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில், இலங்கை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்கு தமது மோதிரத்தை ஸ்ரீ அனுமன் மூலமாக அனுப்பும் கோலத்தில், ஸ்ரீ கோதண்டராமர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இக்கோயிலிலும் திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.