திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பள்ளி மாணவி கடத்தல் விவகாரம்: கிருஷ்ணகிரி அருகே இயல்பு நிலை திரும்பியது

கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 16 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். இந்த நிலையில், வேட்டியம்பட்டி

News image
Updated On :29 செப்டம்பர் 2013, 1:02 pm

ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி அருகே வேட்டியம்பட்டியில் பிளஸ் 1 மாணவி கடத்தல் சம்பவத்தில் மாணவி மீட்கப்பட்டதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.

கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 16 வயதில் பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். இந்த நிலையில், வேட்டியம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த தியாகராஜனின் மகன் லோகேஷ்(25) என்பவர் கடந்த 26-ஆம் தேதி அதிகாலை தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக தேவகி கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி எஸ்.ஆர்.செந்தில்குமார் உத்தரவின்படி, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவியை கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் மீட்டனர். அப்போது அவருடன் இருந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்(எ)விஜய், இளவரசன், அனந்தராமன் ஆகியோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், அந்த மாணவியை கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1-இல் நடுவர் விஜயகுமார் முன்னிலையில் போலீஸôர் ஆஜர்படுத்தினர். அப்போது தன் விருப்பத்திற்கு மாறாக லோகேஷ் தன்னை கடத்தி சென்றதாகவும், தான் தன் தாயுடன் செல்ல விரும்புவதாகவும் அந்த மாணவி தெரிவித்தார். இதையடுத்து மாணவியை பெற்றோருடம் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீஸôர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே கடத்தப்பட்ட மாணவி மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞர் லோகஷ் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதையொட்டி அந்த பகுதியில் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு ஏராளமான போலீஸôர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.இந்த நிலையில், மாணவி தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதால், அந்த பகுதியில் நிலவி வந்த பதற்றம் தணிந்து ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலை திரும்பியது. எனினும், அங்கு தொடர்ந்து போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.