முன்னதாக சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பாமக புதிய வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் சபாநாயகர்தெருவில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில், மாநில பொதுச்செயலாளர் கு.திருஞானம், மாவட்டச் செயலாளர் வேணு.புவனேஸ்வரன், நகரச் செயலாளர் முத்து.குமார், நகரத்தலைவர் பி.கே.அருள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவருக்கு பாமகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பி்ன்னர் கே.ஐ.மணிரத்தினம் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக, பாரதிய ஜனதா கட்சி, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.